செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் - குரோம்பேட்டை சாலையில் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்கின்றன. இதனால் அந்த சாலையில் அதிகமான அளவில் விபத்துகள் நடக்கின்றன. சமீபத்தில் அரங்கேறிய சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டதும், அதிர்ஷ்டவமாக உயிர் தப்பியதும் குறிப்பிடதக்கது. எனவே அந்த சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.