குப்பைத் தொட்டி வைக்கப்படுமா?

Update: 2023-01-19 07:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், முத்துவேல்நகர் பகுதிகளில் குப்பைத் தொட்டி வைக்கப்படவில்லை. முத்துவேல் நகர் பகுதிகளில் 10 தெருக்கள் இருக்கின்றன. இதில் 10-வது தெருவில் ஒரே ஒரு குப்பைத் தொட்டி மட்டுமே வைக்கப்பட்டு இருக்கின்றன. மற்ற இடங்களில் குப்பைத் தொட்டி இல்லாததால், ஆங்காங்கே குப்பைகளை வீசும் நிலை இருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே முத்துவேல்நகர் பகுதியில் கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். 

மேலும் செய்திகள்