போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-01-19 07:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மேற்கு ரெயில் நிலையம் அருகே இரவு நேரங்களில் வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்கள் சாலையின் நடுவே நிறுத்தப்படுகின்றன. இதனால் மாலை 6 மணி முதல் 10 மணி அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் அதுபோன்ற நாட்களில் அந்த இடத்தை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். தினம்தோறும் அரங்கேறும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்