சுகாதார சீர்கேடு

Update: 2023-01-19 07:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையை அடுத்த குமரபுரம், பெரியார் நகர் 3-வது தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் கால் வைத்துதான் வீட்டைவிட்டு வெளியே வரும் சூழல் உள்ளது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் பலமாக வீசுகிறது. நோய் பரவும் ஆபத்தும் நிறைந்துள்ளது. எனவே இந்த புகார் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்