பயணிகள் கோரிக்கை

Update: 2023-01-19 06:55 GMT

சென்னை பாரிமுனை - செங்குன்றம் இடையே 242 என்ற வழித்தட எண்ணில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வழித்தடத்தில் சொகுசு பஸ்களே அதிகம் இயக்கப்படுகின்றன. இதனால் அதிக கட்டணம் கொடுத்து பயணிகள் செல்லும் நிலை இருக்கிறது. பெண்களும் இலவச பயணத்துக்காக சாதாரண கட்டண பஸ்களுக்காக நீண்டநேரம் காத்திருக்கும் நிலை இருக்கிறது. எனவே சொகுசு கட்டண பஸ்களுக்கு நிகராக சாதாரண கட்டண பஸ்களை இந்த வழித்தடத்தில் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல செங்குன்றத்தில் இருந்து மூலக்கடை, புளியந்தோப்பு வழியாக பாரிமுனைக்கு பஸ்கள் இயக்கினால் இன்னும் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும்.

மேலும் செய்திகள்