போக்குவரத்து சிக்னல் வேண்டும்

Update: 2023-01-11 12:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதி அருகே, திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், மறைமலை நகர் பகுதியில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் நகரின் முக்கிய பகுதியான இந்த இடத்தில் சிக்னல் இல்லாததால் சாலையை கடக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தடுப்பதற்கு இந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்