செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் பகுதியில் உள்ள ஆத்துார் ரயில்வே கேட் அருகே, மழை நீர் வெளியேறும் நீர்வழிப் பாதை உள்ளது. அந்த நீர்வழிப் பாதையானது, தற்போது புதர் மண்டி, தண்ணீர் செல்லவே முடியாத நிலையில் உள்ளது. மழை காலத்தில் அருகே உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே புதர்களை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?