செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலை ,கிருஷ்ணா நகர் பஸ் நிறுத்தத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிழற்குடையை மாநகராட்சி துறை அதிகாரிகள் அகற்றிவிட்டனர். அதன்பிறகு அங்கு புதிய நிழற்குடை அமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். நிழற்குடை அமைக்கப்படுமா?