அகற்றப்படாத கழிவுகள்

Update: 2023-01-01 13:49 GMT

சென்னை வீரபாண்டிய நகர் 3-வது தெருவில் மழைக்காலத்தில் அடித்த சூறைக்காற்றால் விழுந்த மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. அங்கு குப்பை கழிவுகளும் தேங்கி கிடப்பதால் அந்த இடத்தை கடக்கும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்