வீணாகும் குடிநீர்

Update: 2023-01-01 12:17 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் திருநீர்மலை சாலையில் உள்ள குடிநீர் குழாய் பழுதாகி 2 மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் குடிநீர் வீணாகி வருவதுடன் சாலையில் தேங்கி வழிகிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைவில் இந்த பிரச்சினையை சரி செய்து குடிநீர் குழாயை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்