சென்னை எழும்பூர் வெஸ்டின் பார்க் ஓட்டல் அருகே கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த 3 மாதங்களாக மூடப்படாமலே இருகிறது. இதன் காரணமாக அந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் பள்ளங்களி நீர் தேங்கி பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. பெரும் விபத்து ஏதும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.