செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய சாலையில் குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்கள் குப்பைகளை சாலையிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பை தொட்டியை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.