செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம், காந்திநகர் பகுதியில் பெரிய பாலையத்தம்மன் கோவில் அருகே உள்ள பாதள சாக்கடை திறந்த நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் சாக்கடை திறந்து இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் கால்நடைகள் தவறி விழும் சூழல் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு வழங்க வேண்டும்.