திறந்த வெளி மது அருந்தும் கூடமாக படித்துறை

Update: 2022-12-07 14:38 GMT


கூத்தாநல்லூர் தாலுகா, அய்யனார் கோவில் குளம் படித்துறையை சிலர் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மதுகுடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த படித்துரையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,கூத்தாநல்லூர்

மேலும் செய்திகள்