சாலையை ஆக்கிரமிக்கும் கால்நடைகள்

Update: 2022-12-07 14:28 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேட்டிலிருந்து கொட்டமேடு செல்லும் பகுதியில் கல்வாய் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கால்நடைகள் அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியில் படுத்து உறங்குகின்றன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு இடையே பயணம் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்