செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலம் அம்மன் நகர் 11-வது தெருவில் உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதோடு போக்குவரத்துக்கு இடயூறாகவும் இருக்கிறது. இதனால் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.