சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் 3-வது தெருவில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அச்சத்துடனே அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். மேலும் அடிக்கடி மினி லாரிகள் பள்ளத்தில் மாட்டிக்கொள்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பெரும் விபத்துகள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை மூட வழி செய்ய வேண்டும்.