வடிகால்வாய் வசதி வேண்டும்

Update: 2022-12-04 14:07 GMT

சென்னை கொளத்தூர் ஜெயந்தி நகர் 4-வது குறுக்குச் சந்தில் கழிவுநீர் வடிகால் வசதி கிடையாது. இதனால் இங்கு தேங்கும் கழிவு நீரை கனரக வாகனத்தின் மூலம் அகற்றி வந்தனர். ஆனால் சமீபத்தில் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்ட கம்பத்தால் கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. இதன் காரணமாக கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் கழிவு நீர் வடி கால்வாய் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்