பவுஞ்சூர் அருகே, மதுராந்தகம் செல்லும் சாலை ஓரத்தில், குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகளால் சாலை முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஆகையால், உடனடியாக குப்பைகளை அகற்ற, சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.