பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-11-30 14:19 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள காலவாக்கம், கண்ணகப்பட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் வசிக்கும் மக்கள். கோவளம், திருவிடந்தை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல திருப்போரூர் - நெம்மேலி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு இடையே 3 கிலோ மீட்டரில் இ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேம்பாலம் ஒருவழி சாலையாகவும், குண்டும் குழியுமாகவும் புதர் மண்டி இருக்கிறது. இதனால் அந்த மேம்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்