சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-30 14:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சிக்கு உட்பட்ட காரைத்திட்டு கிராமத்தில், இருளர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்க அருகே அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளிக்கு மாணவர்கள் சென்று வர மண் சாலை மட்டுமே உள்ளது அதுவும் மிக மோசமாக இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை சேரும் சகதியுமாக இருப்பதால், பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்