நாய்கள் தொல்லை

Update: 2022-11-30 13:59 GMT


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. அதுமட்டுமின்றி வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மன்னார்குடி

மேலும் செய்திகள்