எருக்கஞ்சேரி கண்ணபிரான் கோவில் தெரு அருகே உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினறனர். எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வழி செய்ய வேண்டும்