சிரமத்தில் மக்கள்

Update: 2022-11-23 16:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆர்.எம்.கே. நகர் பகுதியில் நியாய விலைக் கடை அமைந்துள்ளது. இந்த நியாய விலை கடையில் வெளிப்புறம் இருக்கும் ஓலைகள் மிகவும் பழுதடைந்து இருக்கின்றன. இதனால் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வரும் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் ஓலைகள் சரியில்லாததால், மக்கள் மழையில் நனைந்து கொண்டே பொருட்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நியாய விலை கடையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்