சென்னை மணலி புதுநகர் அருகே உள்ள துளசி நகர் பகுதியில் பூங்கா அமைக்கப்பட சுற்றுசுவர் கட்டி கவனிப்பாரின்றி கிடப்பதாக தினத்தந்தி புகார் பெட்டிக்கு செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் பூங்கா பராமரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.