கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2022-11-23 15:01 GMT


திருத்துறைப்பூண்டியிலிருந்து சனி பகவான் பரிகார தலமாக விளங்கும் திருக்கொள்ளிகாடு கோவிலுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் வெளிமாவட்ட பொதுமக்கள் பஸ் வரும் நேரம் தெரியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம் உள்ளது. சனிக்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும் செய்திகள்