சுகாதார சீர்கேடு

Update: 2022-11-20 13:56 GMT

சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் மக்கள் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இங்கு குப்பைகள் கொட்டப்படுவதும், நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டிற்கும் வழி வகுக்கிறது. ரெயில் நிலையத்துக்குள் செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சுகாதார துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்