சென்னை போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கல் பஸ் நிறுத்தத்திலிருந்து பரணிப்பூர் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிவு பெற்றது. ஆனால் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவே இல்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த வழியாக பயணிக்கிறார்கள். எனவே பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.