செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் விட்டிலாபுரம் முதல் கல்பாக்கம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறும் சாலையில் பயணம் செய்யவே சிரமமாக உள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சாலையை சீரமைத்து தர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.