மாநகராட்சி மனது வைத்தால்..

Update: 2022-11-16 16:13 GMT

சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகர் 3-வது தெருவில் விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இதில் அமைந்துள்ள 2 சிறிய அறைகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மழை நீர் வடிகால் வேலைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இந்த மைதானத்தில் மழையின் காரணமாக கழிவு நீரும் மழைநீரும் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்க கழிவு நீர் அகற்றும் அதிகாரிகள் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்