மோசமான நெடுஞ்சாலை

Update: 2022-11-16 14:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்-மதுரவாயல் பகுதியை இணைக்கும் மேம்பாலம் உள்ளது. இதன் அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையானது குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் முதலியவை ஊர்ந்து தான் செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் அரங்கேறுகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்-மதுரவாயல்நெடுஞ்சாலை சீர் செய்யப்படுமா?

மேலும் செய்திகள்