நாய்கள் தொல்லை

Update: 2022-11-16 11:41 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைவீதி பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், கீழ்வேளூர்

==========================

மேலும் செய்திகள்