நூலகம் திறக்கப்படுமா?

Update: 2022-11-16 11:39 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சி காமராஜபுரத்தில் நூலகம் உள்ளது.இந்த நூலகம் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு இன்றி சேதமடைந்து பூட்டிக்கிடக்கிறது. இதனால் இந்தபகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் நூலகத்தை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகத்தை புதுபித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்

====================

மேலும் செய்திகள்