குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-13 14:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மேடவாக்கம் இந்திரகுமாரி தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்லும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சாலையை மேம்படுத்தி மீண்டும் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு வழி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்