பல்லாவரம் ரெயில் நிலையம் செல்லும் வழியில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் தினமும் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். இந்தநிலையில் தற்போது மக்கள் நடந்து செல்ல முடியாதபடி சுரங்கப்பாதை வழி எங்கும் விளம்பர போர்டுகளும், இரு சக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிரமங்கள் போக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?