சாலையில் பாய்ந்தோடும் கழிவுநீர்

Update: 2022-11-09 15:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் செம்பாக்காம் பகுதியிலுள்ள தனலட்சுமி தெரு விரிவு, நெமிலிசேரியில் பாதாளசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கசிந்து சாலையில் பாய்ந்தோடுகிறது. நீண்ட நாட்களாக சாலையில் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. எனவே சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்