ரெயிலில் தண்ணீர் நிரப்பப்படுமா?

Update: 2022-11-09 13:39 GMT

திருப்பதியிலிருந்து-மன்னார்குடி வரை செல்லும் பாமுனி விரைவு ரெயிலில் கழிவறையில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேலும் விரைவு ரெயிலின் நிலைப்பாடு சரியான முறையில் பராமரிப்பின்றி உள்ளது. இதேபோன்று மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் ரெயிலியிலும் கழிவறையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மற்றும் சிறு குழந்தைகளை அழைத்து செல்பவர்கள் தண்ணீர் பாட்டில் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயிலில் போதிய தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில் பயணிகள், மன்னார்குடி

மேலும் செய்திகள்