செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தொழுப்பேடு ஊராட்சி போலமாகுலம் பகுதியில் இருக்கிறது அப்துல் கலாம் தெரு. இந்த தெருவின் முடிவில் உள்ள விவசாய நிலத்தில் இருக்கும் மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடும் நிலையில் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.