சென்னை அருந்ததி நகர் மேட்டுப்பாளையம், திரு.வி.க நகர் பகுதி, பகுதியில் மழை பெய்து தெருக்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றிட கழிவுநீர் அகற்றும் வாரியம் வழி செய்ய வேண்டும்.