நிரம்பி வழியும் குப்பை தொட்டி

Update: 2022-11-03 05:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள ஶ்ரீ பழண்டியம்மன் கோவில் சுற்றுச் சுவர் அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு குப்பைகள் கொட்டப்படும் போது, கோவில் சுவரில் அசுத்தம் படுகிறது. மேலும் குப்பைகள் நிரம்பி வழியும் போது துர்நாற்றம் வீசுகிறது. தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படாததால், அந்த இடமே குப்பை மேடாக மாறி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

மேலும் செய்திகள்