குரங்குகள் தொல்லை

Update: 2022-11-02 16:10 GMT


நாகை மாவட்டம் நாகூர், வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப்பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் சென்று அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்துவதும், வீடுகளில் உள்ளே சென்று பொருட்களை எடுத்தும் சென்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகூர்

மேலும் செய்திகள்