நாய்கள் தொல்லை

Update: 2022-11-02 11:57 GMT


திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கொடிக்கால்பாளையம் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது இரவு நேரங்களில் வாகனத்தில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,மாடு, கோழிகளை கடித்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகமது கடாபி, கொடிக்கால்பாளையம்

மேலும் செய்திகள்