பஸ் நேரத்திற்கு வருமா?

Update: 2022-11-02 11:55 GMT


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து குலமாணிக்கம் வரைவந்து செல்லும் அரசு பஸ் சரியான நேரத்தில் வருவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அலுவலகம் மற்றும் கூலி தொழிலாளர்கள் பஸ் வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சரியான நேரத்திற்கு பஸ் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குலமாணிக்கம்

மேலும் செய்திகள்