கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-10-26 15:18 GMT


திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூத்தாநல்லூர் பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கூத்தாநல்லூர்.

மேலும் செய்திகள்