கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2022-10-26 15:13 GMT


கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் வாகனங்களில் செல்பவர்களின் கண்களை குத்தி விடுகின்றது. மேலும் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கூத்தாநல்லூர்

மேலும் செய்திகள்