செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு , அம்பேத்கர் நகரில் மின்கம்பத்தில் உள்ள மின் விளக்கு சில நாட்களாக ஒளிரவில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருளில் முழ்கி விடுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சம் அடைகின்றனர். மேலும் வாகன விபத்துகள் நடக்கவும் இது வழி வகுக்கிறது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.