சென்னை வேளச்சேரி ஒராண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்திருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் பாதாள சாக்கடைக்கு புதிய மூடி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.