மின்விளக்கு எங்கே?

Update: 2022-10-16 13:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி அன்பு நகர் கக்கஞ்சி தெருவில் கடந்த ஆண்டு புதிதாக 'டிரான்ஸ்பார்மர்' அமைக்கப்பட்டது. அப்போது அதன் அருகில் இருந்த மின்கம்பத்தை எடுத்த போது அதில் உள்ள மின் விளக்கும் எடுக்கப்பட்டு விட்டது. பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் விளக்கு பொருத்தப்படாததால், அங்கு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிதாக மின்விளக்கு அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்