செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து பூந்தமல்லி, தியாகராயர் நகர் போன்ற முக்கிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எப்போது பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். இரவு நேரங்களில் முக்கியமான இடங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் தனியாக நிற்கும் பெண்கள் அச்சப்படும் சூழல் அமைகிறது. எனவே அதிகமான அளவில் இரவு நேர பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்