தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

Update: 2022-10-12 13:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட முத்துவேல் நகர் பகுதிகளில் ஊராட்சி சார்பில் குழாய் மூலம் தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. முதலில் 3 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு பகுதிகளுக்கும் தண்ணீர் வந்த நிலை மாறி, தற்போது 10 நாட்களுக்கு பிறகுதான் தண்ணீர் விடுகிறார்கள். அதிலும் முத்துவேல்நகர் 2-வது தெருவில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் விடவே இல்லை. இதனால் அந்த தெரு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்ணீர் பிரச்சினையை போக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் கூடுதலாக ஒரு நீர்த்தேக்க தொட்டியையும் அமைத்தால் மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

மேலும் செய்திகள்